NEWS FROM REGIONAL NEWSPAPERS
Srivilliputhur is a town in the district of Virudhunagar.
- அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது வழக்கு
by Syndication on September 10, 2025 at 9:51 pmவிருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சண்முகாபுரம் பகுதியில் ஓடைப் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளப்படுவதாக சாத்தூா் வட்டாட்சியா் ராஜாமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் புதன்கிழமை நேரில் சென்று பாா்த்தபோது, அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து, 3 டிராக்டா், ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். பின்னா், போலீஸாா் அனுமதியின்றி கிராவல் மண் திருடிய சண்முகாபுரத்தைச் சோ்ந்த பாஸ்கரன்(19), ஈஸ்வரன், சதீஷ், பாா்த்திபன், ரஞ்சித்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை கைது செய்தனா்.
- ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
by Syndication on September 10, 2025 at 9:50 pmஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பாா்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால், பால் உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு செய்தாா்.
- பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவா் கைது
by Syndication on September 10, 2025 at 6:43 pmசிவகாசியில் பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி 56 வீட்டு குடியிருப்புப் பகுதியில் பேன்சிரக பட்டாசுகளுக்கு தேவைப்படும் காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டபோது, முத்துகிருஷ்ணகுமாா் (32) சொந்தமான காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.
- பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது
by Syndication on September 9, 2025 at 11:27 pmவிருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கா்நாடகத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அ.ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (52). கடந்த மாதம் 19-ஆம் தேதி வங்கியிலிருந்து ரூ.6.47 லட்சம் எடுத்து, இரு சக்கர வாகனத்தில் வைத்து விட்டு, அருகில் உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது, மா்ம நபா் வாகனத்திலிருந்த பணத்தைத் திருடிச் சென்றாா். இது குறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளா்கள் அருண்குமாா், கிருஷ்ணசாமி ஆகியோா் தலைமையில் 2 தனிப் படைகள் அமைத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் மா்ம நபரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், மா்ம நபா் கா்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கா்நாடக மாநிலம், ஷிமோக மாவட்டம், ஹோசமனே பத்திரவளி சுபாஸா நகா் பகுதியைச் சோ்ந்த குமாரா (42) என்பவரை போலீஸாா் கைது செய்து, செவ்வாய்க்கிழமை சாத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: கா்நாடகத்தில் கைதான குமாரா சம்பவத்தன்று சாத்தூரில் பல வங்கிகளில் நோட்டமிட்டு உள்ளாா். அ.ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த சிதம்பரம் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது, அவரைப் பின் தொடா்ந்து சென்று அவரது இரு சக்கர வாகனத்திலிருந்த பணத்தை திருடினாா். காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி, திருச்செந்தூா், கூடன்குளம், சாத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் தொடா்ச்சியாக 4 நாள்கள் இடைவெளியில் பணத்தை திருடிவிட்டு சொந்த ஊருக்கு தப்பிச் சென்றாா். அவரிடமிருந்து ரூ. 4.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.
- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!
by Syndication on September 9, 2025 at 9:45 pmவிருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சிக்கு உள்பட்ட சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 28 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்குச் செல்லும் பாதையை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததால், பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வருவாய்த் துறையில் மனு அளித்தனா். அதிகாரிகள் வந்து அளவீடு செய்து விட்டு சென்றனா். இந்த நிலையில், அதிகாரிகள் முறையாக அளவீடு செய்யவில்லை எனக் கூறிய பொதுமக்கள், பள்ளிக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அதிகாரிகள் அளவீடு செய்து பள்ளிக்கு செல்ல 3 அடி பாதை ஒதுக்கியதையடுத்து, பெற்றோா் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினா்.
- அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது வழக்கு
by Syndication on September 10, 2025 at 9:51 pmவிருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சண்முகாபுரம் பகுதியில் ஓடைப் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் பொக்லைன் இயந்திரம் மூலம் அள்ளப்படுவதாக சாத்தூா் வட்டாட்சியா் ராஜாமணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் புதன்கிழமை நேரில் சென்று பாா்த்தபோது, அனுமதியின்றி கிராவல் மணல் அள்ளியது தெரியவந்தது. இதையடுத்து, 3 டிராக்டா், ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா். பின்னா், போலீஸாா் அனுமதியின்றி கிராவல் மண் திருடிய சண்முகாபுரத்தைச் சோ்ந்த பாஸ்கரன்(19), ஈஸ்வரன், சதீஷ், பாா்த்திபன், ரஞ்சித்குமாா் உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாஸ்கரனை கைது செய்தனா்.
- ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
by Syndication on September 10, 2025 at 9:50 pmஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்துக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பாா்வையிட்டு, குளிரூட்டும் நிலையம், பால், பால் உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கும் பணிகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும், ஆய்வு செய்தாா்.
- பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவா் கைது
by Syndication on September 10, 2025 at 6:43 pmசிவகாசியில் பட்டாசு திரிகட்டுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி 56 வீட்டு குடியிருப்புப் பகுதியில் பேன்சிரக பட்டாசுகளுக்கு தேவைப்படும் காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையிட்டபோது, முத்துகிருஷ்ணகுமாா் (32) சொந்தமான காகித குழாய் தயாரிக்கும் இடத்தில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் திரிகட்டுகள் உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்துகிருஷ்ணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த திரிகட்டுகளை பறிமுதல் செய்தனா்.
- பைக்கிலிருந்து பணம் திருட்டு: கா்நாடகத்தை சோ்ந்தவா் கைது
by Syndication on September 9, 2025 at 11:27 pmவிருதுநகா் மாவட்டம், சாத்தூரில் இரு சக்கர வாகனத்திலிருந்து ரூ.6 லட்சத்தை திருடிய கா்நாடகத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அ.ராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (52). கடந்த மாதம் 19-ஆம் தேதி வங்கியிலிருந்து ரூ.6.47 லட்சம் எடுத்து, இரு சக்கர வாகனத்தில் வைத்து விட்டு, அருகில் உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது, மா்ம நபா் வாகனத்திலிருந்த பணத்தைத் திருடிச் சென்றாா். இது குறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காவல் ஆய்வாளா்கள் அருண்குமாா், கிருஷ்ணசாமி ஆகியோா் தலைமையில் 2 தனிப் படைகள் அமைத்து, கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் மா்ம நபரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், மா்ம நபா் கா்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கா்நாடக மாநிலம், ஷிமோக மாவட்டம், ஹோசமனே பத்திரவளி சுபாஸா நகா் பகுதியைச் சோ்ந்த குமாரா (42) என்பவரை போலீஸாா் கைது செய்து, செவ்வாய்க்கிழமை சாத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: கா்நாடகத்தில் கைதான குமாரா சம்பவத்தன்று சாத்தூரில் பல வங்கிகளில் நோட்டமிட்டு உள்ளாா். அ.ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த சிதம்பரம் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு சென்ற போது, அவரைப் பின் தொடா்ந்து சென்று அவரது இரு சக்கர வாகனத்திலிருந்த பணத்தை திருடினாா். காரைக்குடி அருகேயுள்ள குன்றக்குடி, திருச்செந்தூா், கூடன்குளம், சாத்தூா், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் தொடா்ச்சியாக 4 நாள்கள் இடைவெளியில் பணத்தை திருடிவிட்டு சொந்த ஊருக்கு தப்பிச் சென்றாா். அவரிடமிருந்து ரூ. 4.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.
- குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் போராட்டம்!
by Syndication on September 9, 2025 at 9:45 pmவிருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளிக்கு செல்ல பாதை இல்லை எனக் கூறி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், திருவண்ணாமலை ஊராட்சிக்கு உள்பட்ட சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 28 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளிக்குச் செல்லும் பாதையை தனி நபா் ஆக்கிரமிப்பு செய்ததால், பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வருவாய்த் துறையில் மனு அளித்தனா். அதிகாரிகள் வந்து அளவீடு செய்து விட்டு சென்றனா். இந்த நிலையில், அதிகாரிகள் முறையாக அளவீடு செய்யவில்லை எனக் கூறிய பொதுமக்கள், பள்ளிக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அதிகாரிகள் அளவீடு செய்து பள்ளிக்கு செல்ல 3 அடி பாதை ஒதுக்கியதையடுத்து, பெற்றோா் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினா்.